Jeyamohan

Nov 26, 2023
  • by jeyamohan
    அன்புள்ள ஜெ, வணக்கம். என் பெயர் கார்த்திகேயன். இளம் வாசகன். தங்களின் ஆழ் நதியை தேடி படித்தேன். என் மனதில் இருந்த பல கேள்விகளுக்கான பதிலும், இலக்கியம் சார்ந்து சில தெளிவுகளும் கிடைத்தன. நன்றி. உங்களை வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ஞான மரபும் அதற்கே உரிய சில தியான முறைகளைக் கொண்டிருக்கும் என எழுதியிருக்கிறீர்கள். எழுத்தாளனுக்கு தத்துவம் ஏன் அவசியம் என்று உங்கள் எழுத்துக்கள், காணொளி வாயிலாக அறிந்துகொண்டேன். என் கேள்வி என்னவென்றால் ஒரு எழுத்தாளனாக உங்கள் எழுத்துக்களில் யோகம், தியானம் ஆகியவற்றின் பங்கு என்ன? கார்த்திகேயன் அன்புள்ள கார்த்திகேயன், வேதாந்தம் யோகத்தை எப்படி அணுகுகிறது என்பது முதல் வினா. தத்துவநோக்கிலும் வரலாற்று நோக்கிலும்  வேதாந்தத்திற்கு யோகமரபுகளுடன் […]
  • by jeyamohan
    எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். தொலைபேசித் துறையில் பணியாற்றினார். மார்க்சீய சித்தாந்தவாதி. ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். எஸ்ஸார்சி
  • by jeyamohan
    இந்திய ஆங்கில இலக்கியம், தேவை ஓர் அழகியல் இயக்கம் OFF MEN WOMEN AND WITCHES- Amazon  Of Men, Women and Witches – என் நான்காவது ஆங்கிலநூல் அன்புள்ள ஜெ இந்திய அளவில் ஓர் அழகியல் இயக்கம் தேவை என்னும் உங்கள் கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். உண்மையில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களுக்கான சந்தை என்ன என்பது புகைமூட்டமாகவே உள்ளது. ஏனென்றால் இந்திய ஆங்கிலவாசிப்பு என்பது பெருநகர் சார்ந்து நிகழ்வது. முன்பெல்லாம் கல்விநிலையங்களில் ஒரு […]
  • by jeyamohan
    காந்திகளிடமிருந்து ஒரு விருது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சர்வோதய ஜெகந்நாதன் விருது உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு  விருது வழங்கப்பட்ட செய்தி வாசித்ததும் முதலில் தோன்றிய எண்ணம் உங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் எல்லாவற்றிலும் மிக சிறந்த விருது இது என்பது தான். நிகழ்வு பற்றிய உங்கள் பதிவிலும், வெளி வந்த கடிதங்கள் எல்லாவற்றிலும் அதே கருத்து வந்திருப்பது உங்கள் பணியின் மேன்மையை வலியுறுத்துகிறது. சமூக மாற்றம், மக்கள் […]
  • by jeyamohan
    ஆலயக்கலை வகுப்புகளின் மூலமாக ஒரு பத்து பேராவது விரிவாக வாசித்தால் கூட போதும் என்று எண்ணியிருந்த எனக்கு, இதை ஒரு இயக்கமாக மாற்றும் வாய்ப்பு  கிடைத்திருக்கிறது.  ஆரம்பம் முதலே இந்த முகாம்களில் என்ன மாதிரியான அமர்வுகளை நிகழ்த்த வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டுக் கொண்டு அதிகம் அறியப்படாத வாஸ்து மரபு, சிற்ப மரபு, ஆகம மரபு என்று அறிமுகம் செய்து வைத்து பின்பு குடைவரைகள் தொடங்கி பெரும் ஆலயங்களாக அவை விரிவடையும் காலகட்டம் வரை ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வழங்க முடிந்தது.  […]